சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விநாயகர் சதுர்த்தி விழா வசூலுக்கு சென்ற பள்ளி மாணவியை வீட்டுக்குள் அழைத்து தவறாக நடக்க முயன்றதாக போலி சாமியார் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களூடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகேயுள்ள வெள் ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா (50). விஜயராஜா பழைய பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்ற பெயரில் மாந்திரீக தொழில் செய்து வந்தார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நன்கொடை பெறுவதற்காக இவரது மாந்திரீக நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியிடம் நைசாக பேசிய விஜயராஜா, அவரது கன்னத்தில் கிள்ளி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகின்றது. இத னால் பயந்து போன சிறுமி, அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார். அங்கு நடந்த சம்பவம் க றித்து அந்த சிறுமி தனது தோழியிடம் தெரிவித்த போது, அந்த சாமியார் தன்னையும் ஒரு முறை அவ்வாறு செய்ததாக அவரது தோழி கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விஜயராஜா நடத்தும் மாந்த்ரீக பரிகார நிலையத் திற்கு சென்றனர். சிறுமியின் விவகாரம் வெளியே தெரிந்து விட்டது என்றதும் மாந்த்ரீக நிலையத்தை பூட்டி விட்டு விஜயராஜா தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கதவின் பூட்டை உடைத்து, பொதுமக்கள் உள்ளே சென்றனர். திகில் திரைப்படங்களில் வருவதை போல அங்கு பள்ளி மாணவிகளின் சீருடைகள் மற்றும் உடைகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த ஒரு லேப்டாப்பை எடுத்து பார்த்த போது, அதில் போலி சாமியார் விஜயராஜா பள்ளி சிறுமிகள் மற்றும் பெண்களிடம் நெருக்கமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தன. பின்னர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வேறொரு பகுதியில் பதுங்கி இருந்த விஜயராஜாவை சுற்றி வளைத்து பிடித்து நையப்புடைத்து வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விஜயராஜாவை மீட்டு போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். தன்னிடம் பரிகார பூஜைக்கு வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.