திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்புறம் உள்ள 16 கால் மண்டபம் அருகே சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 24ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.