கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கிழக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கான சத்துணவை சாப்பிட்டு பார்த்த ஆட்சியர் உணவு தரமில்லாததை அறிந்து சத்துணவு அமைப்பாளர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் எச்சரிக்கை விடுத்தார். ஆய்வின்போது, சத்துணவுக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற அரிசியை உடனடியாக திருப்பி அனுப்பிவிட்டு, புதிய அரிசியைப் பெற்று மாணவர்களுக்கு சமைத்து வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.