அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சில்லறையில் விற்பனை செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பால் ரூ.54-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஆவின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள நுகர்வோருக்கும் சில்லறை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையைஅண்மையில் லிட்டருக்கு ரூ.7 உயர்த்தியதால் அதற்காக அரசு அறிவித்துள்ள 7 ரூபாய் ஊக்கத்தொகை, ஆவினுக்கு அனுப்பப்படும் பாலுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் பாலுக்கு வழங்கப்படாததால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.