தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே 31, 2026 அன்று தவெக இளைஞரணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் மீது பாலியல் புகார் அளித்ததாக தெரிவித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து ஜூன் 2-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. சரவணனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.