பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி முடித்த ஒப்பந்ததாரருக்கு பில் தொகையை விடுவிக்க மீதமுள்ள 2,000 ரூபாய் லஞ்ச தொகையை வழங்க வேண்டும் என பேப்பரில் எழுதி காட்டும் வட்டார வளர்ச்சி அலுவலரின் காணொளி வெளியாகியுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரான சித்தார்த் பேசும் திறனை இழந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் பில் தொகையை விடுவிப்பதற்காக ஏற்கனவே கோரிய லஞ்சத்தொகையில் 4,500 ரூபாய் வழங்கியது போக மீதமள்ள தொகையை வழங்க வேண்டும் என பேப்பரில் எழுதி காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.