ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த கம்பத்தராயன் கிரி மலைப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக 3ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக மலைக்கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மலைப்பகுதிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில் வன ஊழியர்கள் செடி கொடிகளை வைத்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.