தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8ஆயிரத்து 500 கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கத்திற்கு 22 ஆவது நாளாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் பரிசல் சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.