பணம் வாங்கிக் கொண்டு பணியாணை வழங்கியதற்கான ஆதாரங்கள் அடிப்படையிலேயே கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்க கூடும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மூக்கையாத் தேவர் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் அரசியல் காழ்ப்புணர்வு ஏதும் இல்லை என்றார்.