கிராம சபை தொடர்பான 8 கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்துள்ளார். பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை (Honorarium) கணிசமாக உயர்த்துதல், உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல், கிராம சபை தீர்மானங்களைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், கிராம சபை விவாதங்களில் மக்களுக்கு அதிக வாய்ப்பளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.