கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் கிராமத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசு நிதியில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை தற்போது தனியார் ஒப்பந்ததாரர் சிமெண்ட் குடோனாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய விசாரணை மேற்கொண்டு ,கிராம சேவை மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்த்னர்.
Back to Top News
Top
September 6, 2026 at 9:39 AM
அரசு நிதியில் கட்டப்பட்ட கிராம சேவை மையமா? சிமெண்ட் குடோனா?
Polimer News