மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமாயின. தீயில் சேதமடைந்த இரண்டு பேருந்துகளில், 6-ஆம் வகுப்பு மாணவிகள் சனிக்கிழமையன்று கல்விச் சுற்றுலா சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏதாவது ஒரு பேருந்தின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து, அது அருகில் இருந்த மற்றொரு பேருந்துக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Back to Top News
Top
September 6, 2026 at 8:18 AM
தனியார் பெண்கள் பள்ளிப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து சேதம்..
Polimer News