தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி வைப்பார் ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் ஜேசிபி மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மணல் அள்ளப்படுவது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால், தொலைபேசி எண்ணை மாஃபியாக்களிடம் கொடுத்து மிரட்டப்படுவதாகவும் தவெக நிர்வாகி எபினேசர் குற்றம்சாட்டியுள்ளார். மணல் அள்ளப்படும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.