யார் இந்த ராஜசேகர்? சென்னை தி.நகரை சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் என்பவர், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மருத்துவர் ராஜசேகர், தனது இன்ஸ்டா பக்கத்தில், மகப்பேரு மற்றும் குழந்தைகள் சம்மந்தமான ஆலோசனை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். ரிசப்சனிஷ்ட் பார்த்த வேலை..! சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் பவித்ரா. இவரது கணவர் கணேஷ், குற்ற வழக்கில் கைதாகி கடந்த 8 மாதத்திறக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார். பவித்ராவிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவர் சிறை செல்லும் போது இரண்டாவதாக முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். ஏற்கனவே கணவர் சிறையில் இருப்பதால் சாப்பாட்டுக்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்த பவித்ரா, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆண்டாள் (64) கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (26) ஆகியோரிடம் பவித்ரா ஆகியோரிடம் தனது சூழ்நிலையை சொல்லி அழுது புலம்பியதாக கூறப்படுகிறது. அப்போது ஆண்டாள், தனக்கு தெரிந்த ஆந்திர தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. எனவே 2 வதாக உனக்கு பிறக்கும் குழந்தையை அந்த தம்பதிக்கு கொடுத்து விடலாம்.. அதற்காக 4 லட்ச ரூபாய் பணம் வாங்கி தருகிறேன். பிரசவத்துக்கான செலவையும் ஆந்திர தம்பதியே ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். ஆண்டாளும், தனலட்சுமியும் வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றும் துர்காவிடம், இது பற்றி தெரிவித்ததோடு, பவித்ராவிற்கு குழந்தை பிறந்த சில தினங்களில் ஆந்திர தம்பதிக்கு கொடுக்க வேண்டும்.. எதுவும் சிக்கல் வராமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 18ஆம் தேதி பவித்ராவுக்கு அந்த மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கமிசன் கொடுக்காததால் ஆத்திரம்...! மறுநாளே 4 லட்சம் பணத்தை வாங்கி பவித்ராவிற்கு கொடுத்துள்ளனர். அதில் கமிசன் பணமாக மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா, இடைத்தரகர் ஆண்டாள், ஆகியோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் கமிஷனாக பவித்ரா கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமிக்கு மட்டும் கமிஷன் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, குழந்தை விற்பனை விவகாரத்தை பவித்ராவின் பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. 7 பேர் கைது..! தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த ஆண்டாள், கொடுங்கையூரைச் சேர்ந்த தனலட்சுமி, ராயப்பேட்டை சேர்ந்த துர்கா, குழந்தையை வாங்கிய ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த செல்வரசி - கணேசமூர்த்தி தம்பதியினர் இவர்களோடு, தனியார் ,மருத்துவமனை உரிமையாளர் ராஜசேகரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை கைது செய்தனர். கைதான டாக்டருக்கு திடீரென நெஞ்சு வலி..! மருத்துவர் ராஜசேகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக, அவரை வில்லிவாக்கம் போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசார் தயங்குவது ஏன்? பின்னணியில் பெரிய ஆட்கள் தொடர்பு இருப்பதால் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையோ , புகைப்படங்களையோ வில்லிவாக்கம் காவல் துறையினர் வெளியிடாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.