பாரம்பரிய உடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருச்சியில் நடைபெற்ற திருமணமான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திருச்சி 2026ஃபேஷன் ஷோ' என்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் Ramp Walk வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெண்கள் அழகிய பட்டுச் சேலை உடுத்தி தலையில் மல்லிகைப் பூ சூடி மேடையில் நளினமாக நடந்து வந்த காட்சி, அனைவரையும் கவர்ந்த நிலையில் நிகழ்வின் முத்தாய்ப்பாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் கம்பீரத்துடன்மேடையில் நடந்து வந்தார்.