நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவுக்கு பருவநிலை மாற்றமே மிக முக்கியமான காரணம் என WWA எனப்படும் உலக வானிலை பண்புக்கூறு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இமயமலைப் பகுதியில் இயல்பு நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருந்ததாக அம்மையத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2000-ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் ஆண்டுக்கு அரை மீட்டர் வரை மெலிதாகி வருவதாகவும் அதனுடன் உறைபனி நிலம் உருகுவதும் பாறைச் சுவர்களைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்கனவே பலவீனமடைந்திருந்த இந்தப் பகுதி, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதல், உறைபனித் தளர்வு மற்றும் அதிகப்படியான வெப்பம் ஆகியவற்றால் மேலும் நிலைதடுமாறி இந்த பெரும் விபத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.