நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதன் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிலம்பரசன், தனது ரசிகர்களிடம் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். தரத்தில் சமரசம் இல்லை – சிலம்பரசன் ‘அரசன்’ திரைப்படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல், மிகச்சிறந்த தரத்தில் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கம் என சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த ‘அரசன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். தீபாவளிக்கு ‘World of Arasan’ சிறப்பு விருந்து படத்தின் வெளியீடு தள்ளிப்போனாலும், ரசிகர்களை ஏமாற்றாமல் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விருந்து அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘World of Arasan’ என்ற பிரத்யேக திரையரங்க புரமோ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்த புரமோ மூலம் ‘அரசன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ‘அரசன்’ படத்தின் வெளியீடு பொங்கலில் இருந்து தள்ளிப்போனாலும், தீபாவளிக்கு ‘World of Arasan’ மூலம் சிலம்பரசன் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது. ‘அரசன்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.