சேலம் எடப்பாடி அருகே கோணசமுத்திரத்தைச் சேர்ந்த கோகிலா (23) என்பவர் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் கர்ப்பத்திற்கு அம்மாசி (26) என்பவர் தான் காரணம் என்று சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் கோகிலா புகார் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அம்மாசியுடன் கோகிலாவை அனுப்பி வைத்த காவல்துறையினர் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் வெள்ளாளபுரத்தில் விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து கோகிலா சடலமாக மீட்பு திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கோகிலாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அம்மாசி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காதலன் அம்மாசி போலீசாரிடம் வாக்குமூலம் அம்மாசியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் கொங்கணாபுரம் காவல்துறையினர்