தமிழகத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்த ஊழியர்கள் பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதல் விலை கிடையாது, MRP விலைக்கே விற்பனை செய்கிறோம் என ஊழியர்கள் கூவி, கூவி விற்பனையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.