கள்ளக்குறிச்சி அருகே விவசாயக் காட்டிற்கு சென்ற மூதாட்டியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்தனர். மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த விருதாம்பாள் நேற்று மாலை தனது விவசாய காட்டிற்கு பயிரிடப்பட்டிருந்த கம்பு பயிரைப் பார்ப்பதற்கும், குருவிகளை விரட்டுவதற்கும் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் தேடியும் கிடைக்காத அவர், பின்னர் பக்கத்து காட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த தாலிச் செயின், கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.
Back to Top News
Top
August 31, 2026 at 10:13 AM
கம்பு காட்டில் மூதாட்டி கொடூரக் கொலை; நகைக்காக மூதாட்டியை கொன்ற இளைஞர் கைது..!
Polimer News