பரமத்தி வேலூர் பிலிக்கல்பாளையம் அருகே, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவியை கட்டிப்போட்ட முகமூடி கொள்ளையர்கள், 40 சவரன் நகைகளையும், 40 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்ததுச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெல்ல வியாபாரியான வைரவன், தனது மனைவி சுமதி உடன் பிலிக்கல்பாளையத்தில் வசித்துவருகிறார். நள்ளிரவில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கணவன், மனைவியை கட்டிப்போட்டு, நகை, பணம் எங்கே உள்ளது எனக் கூற மறுத்ததால் வைரவனை கத்தியால் கிழித்ததாக கூறப்படுகிறது. அச்சமடைந்த சுமதி பீரோவில் உள்ளதாக கூற, கொள்ளையர்கள் பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை நாமக்கல் எஸ்.பி. யாதவ் கிரிஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Back to Top News
Top
August 31, 2026 at 10:27 AM
கணவன், மனைவியைக் கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை..
Polimer News