திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார் என்றும் அவரது ஆட்சிக்கு நூற்றுக்கு 80 மதிப்பெண் வழங்குவதாகவும் கூறினார். முதலமைச்சர் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறி வரும் அமைச்சர்கள் குறித்துப் பேசிய வைகோ, முதலமைச்சரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது என்றார். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும் என்று கூறிய அவர், அமைச்சர்கள் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது என முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.