நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அதில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் 343 பேருக்கு நியூயார்க்கில் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானத்தால் மோதி இரட்டை கோபுரங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியபோது, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க நூற்றுக்கணக்கானத் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர். விமான எரிபொருளால் தீ வேகமாகப் பரவி, வெப்பம் தாங்காமல் கட்டடம் இடிந்துவிழுந்ததில் தீயணைப்புத் துறையினர் 343 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 10, 2026 at 11:11 AM
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி..
Polimer News