பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தமிழக அரசு 289 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரிடர் ஏற்படும் முன்பே இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.