விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் பயணக் கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் .6 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய கட்டணம் 17 ஆயிரத்து 153 ரூபாயாகவும் சென்னை-மதுரை இடையே வழக்கமான கட்டணம் 5 ஆயிரத்து 393 ரூபாயாக இருந்தநிலையில் இன்றைய கட்டணம் 19ஆயிரத்து 761 ரூபாயாக உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.