அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்திலுள்ள உக்கடை பெரிய ஏரியில் சுற்றித் திரியும் முதலையைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் ஏரியின் கரையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வோருக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து நேரலாம் என அவர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.