கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் மல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படும் நிலையில், போதிய விலை கிடைக்காததால் தென்பெண்ணை ஆற்றில் மூட்டை மூட்டையாக ஒன்றரை டன் மல்லி பூக்களை விவசாயிகள் வீசி சென்றனர். கடந்த சில நாட்களாக செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் மல்லி பூக்கள் மலர்ந்துள்ளதாலும், பூக்களில் புழுக்கள் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.