மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பள்ளி ஆசிரியை ராஜலட்சுமியின் வீடு புகுந்து, அவரது வாயில் துணியைத் திணித்து, 6 சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில், அவருடன் பணியாற்றும் சக ஆசிரியை அன்னபூரணி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய அன்னபூரணி, அவரது வீட்டில் நகைகள் இருப்பதையும் கணவர் அடிக்கடி வெளியூர் செல்வதையும் தெரிந்து வைத்துள்ளார். சம்பவத்தன்று, மற்ற நகைகள் எங்கிருக்கிறது என்பதை ராஜலட்சுமி கூற மறுத்ததால், அவரது கழுத்திலிருந்த நகையை மட்டும் இருவரும் பறித்துச் சென்றுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அன்னபூரணி என்ற அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளி கனிமொழியும் சிக்கினர்.
Back to Top News
Top
August 18, 2026 at 7:23 AM
வீடு புகுந்து தனியார் பள்ளி ஆசிரியையைத் தாக்கி நகை பறித்த சம்பவம்..
Polimer News