அறநிலையத்துறைக்கு தேர்வான 80 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய். கோயில்களில் கட்டப்பட்ட அன்னதான கூடம், காணிக்கைக் கூடம் ஆகியவற்றையும் காணொலி மூலம் திறந்து வைத்தார். 36 உதவி பொறியாளர்கள், 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் விஜய். ரூ.23.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபம் திறப்பு.