மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 80 வயதான தனது தாயார் முத்துச் செல்வியின் பிறந்த நாளை அவரது மகள் தனலட்சுமி 80 தட்டுகளில் சீர்வரிசை 8 பவுன் தங்க நகைகள், 8 வகையான வெள்ளிப் பொருட்கள் வழங்கி கொண்டாடினார். பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட உறவினர்களுக்காக 28 வகையான அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.