தூத்துக்குடி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் முத்துக்குமாரும், முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரும் பழகி வந்த நிலையில், முத்துலட்சுமியிடமிருந்து வாங்கிய நகைகளை முத்துக்குமார் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். நகைகளைத் திருப்பித் தரும்படி முத்துலட்சுமியின் சகோதரி பிரியா கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு அவரை முத்துக்குமார் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 2, 2026 at 7:55 AM
பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த காவலர் கைது..!
Polimer News