திருச்செந்தூர் பஜார் பகுதியில் பைக்கில் சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்களை பிடிக்க முயன்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து எஸ்.ஐ. படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், பைக்கில் தப்பி சென்ற ராகேஷ், எமர்சன் ஆகிய இரு இளைஞர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.