பெண்ணை துண்டு துண்டாக வெட்டி படுகொலை கொலை செய்து, உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் போட்டுவிட்டு, மீதி பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ஆக்ரா ரயிலில் அனுப்பி வைத்த வழக்கில், கைதான தம்பதியரின் அடுத்தடுத்த வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு தம்பதி கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் ஹைதுன் நிஷாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து, பிரியாணி டபாராவில் போட்டதும், மீதி உடலை சூட்கேஸில் வைத்து அனுப்பியதும் தெரியவந்தது. ஆனால் போலீசாருக்கு ஹைதுன் நிஷாவின் தலை கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து மணிப்பூர் மாநிலத்தில் பதுங்கியிருந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் பகமதி மாஜி தம்பதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் டிரான்ஸிட் வாரண்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கூடுவாஞ்சேரி போலீசார் தலை எங்கே? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக, தலை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக ஹைதுன் நிஷாவின் தலையை வெட்டி அதிலிருந்த முடி, சதையையெல்லாம் வெட்டி , மண்டை ஓட்டை மட்டும் சூட்கேசில் போட்டு அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், பெண்ணின் மீதி உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வைத்துவிட்டு கெட்டுப் போகாமல் இருக்க யூட்யூப் பார்த்து, Preservative செய்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டது எப்படி? என்பதை நேரில் நடித்துக் காட்டுவதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் இருவரையும், கொலை நடந்த இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ஹைதுன் நிஷாவை கயிறால் தலைகீழ் கட்டி தொங்கவிட்டு, மொட்டை அடித்து, தலையை துண்டித்து படுகொலை செய்தது தெரியவந்தது. அதேநேரம், தலை எங்கே இருக்கிறது? என கண்டுபிடிக்க விடாமல் மாற்றி மாற்றிக்கூறி, கில்லாடி தம்பதி குழப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 4 போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.