திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 6ஆம் வகுப்பு மாணவன் கவுசிக் இறப்புக்கு நீதிகேட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயர்மின் விளக்கு கோபுரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் மாணவன் கவுசிக் நேற்று உயிரிழந்தார். மாணவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரை முற்றுகையிட்ட சிறுவனின் உறவினர்கள், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு வழங்குவதில் காலம் தாழ்த்துவது ஏன்? என சரமாரி கேள்விகளை எழுப்பினர்.