சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகத்தில் தன்னை விட வயதில் மூத்த பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சக அதிகாரியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரியும் 32 வயதான ஜிஎஸ்டி பெண் ஆய்வாளரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், உயரதிகாரிகளின் புகைப்படத்துடன் பெண் காவல் ஆய்வாளரின் புகைப்படத்தை இணைத்து காதலுக்கு வயது தடையில்லை என பதிவிட்டதாகவும் கைதான ஜிஎஸ்டி ஆய்வாளர் சவ்ரவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பணியிடத்திலும் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் சவ்ரவை கைது செய்து சிறையிலடைத்தனர்.