திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, பனியன் கம்பெனி வேன் மோதி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற மாருதி ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணித்த 14 குழந்தைகளும் காயமடைந்தனர். பனியன் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற வேன், 2 பள்ளி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதிவேகமாகச் செல்லும் பனியன் நிறுவன வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.