கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக திருவிழா 2028, மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் ஒரு கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இதுதொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ரமேஷ், வினோத், மாவட்ட ஆட்சியர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.