ஆடி மாதம் நெருங்குவதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தி பகுதிகளில் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஒரு அடி முதல் 25 அடி உயரம் வரை உள்ள அரிவாள்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ரவி என்பவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்காக 500 கிலோ எடை கொண்ட 25 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாளை தயாரித்துள்ளார்.