அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகிலுள்ள ஹண்டிங்டன் தாவரவியல் பூங்காவில் டைட்டன் ஆரம் செடிகள் ஒரே நேரத்தில் பூக்கத் தொடங்கிய அரிய காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இந்தோனேஷியாவின் சுமத்ரா மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட டைட்டன் ஆரம் செடிகள், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துர்நாற்றம் வீசும் பூக்களில் ஒன்றாகும். 'பிணப் பூக்கள்' என்று அழைக்கப்படும் டைட்டன் ஆரம் பூக்கள், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும்.