அமெரிக்க குடியேற்றத்துறை கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி உயர் கல்விக்கான சர்வதேச எஃப்-1 விசாதாரர்கள் இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை மட்டுமே தங்கிப் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சிப் பணிகளை முடிக்க 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூடுதல் காலம் தேவைப்படும் மாணவர்கள், தங்களது விசா காலாவதியாவதற்கு முன்பாகவே முறையான நீட்டிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். புதிய விதிகள் காரணமாக 3 லட்சத்து 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் உட்பட 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய விதியானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதிப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும். 2010ஆம் ஆண்டுக்கு முன்பு மாணவர்களாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களில், 2,100 பேர் இந்த ஆண்டு ஏப்ரல் வரை இன்னும் மாணவர் தகுதியிலேயே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.