எதிர்க்கட்சிகள் போல் அல்லாமல் கூடுதல் பொறுப்பு உணர்ந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அவர், ஜனநாயக விரோத நடவடிக்கையான மிசாவை எதிர்கொண்ட திமுகவுக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர கேலி கிண்டலாக பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.