விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களில் இருந்து ஸ்டார்டர்கள், மின்சார வயர்களை திருடியதாக 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வைரம்பேட்டை கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த அவர்களிடம் விசாரித்தபோது, பதுக்கி வைத்திருந்த மின்சாரப் பொருள்களை எடுக்க வந்ததாகத் தெரிவித்தனர்.