தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான சென்னை மாவட்ட அளவிலான "முதலமைச்சர் கோப்பை" விளையாட்டுப் போட்டிகளை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்ததில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஏதுவாக குளிர்சாதன வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் 38 மாவட்டங்களில் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறினார்.