கும்பகோணம் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, விபத்து தொடர்பான ஆய்வு உள்ளிட்ட பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் கும்பகோணம் அலுவலகத்துக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தினமும் கும்பகோணம் வந்துசெல்ல முடியாத நிலையில் நிரந்தரமாக அதிகாரிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Back to Top News
Top
September 2, 2026 at 5:08 AM
வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் காலி..
Polimer News