திண்டுக்கல் மாவட்டம் நந்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த மாயழகன் என்ற இளைஞர் ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாயழகன் தற்கொலைக்குக் காரணமானவர்கள் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்ததால், பிரேம்நாத், மகாதேவன், ஜெயபிரகாஷ், சுரேஷ், நவீன் என்பவர்களை நத்தம் போலீசார் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.