சென்னை துறை முகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் சுமார் 16 ஆண்டுகள் பயன்பாடின்றி இருந்த தூண்களை தற்போது கார்டர்கள் மூலம் இணைக்கும் பணியும் வேமெடுத்துள்ளது. 5,500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியிலும் இரண்டாம் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.