சென்னை துறை முகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் சுமார் 16 ஆண்டுகள் பயன்பாடின்றி இருந்த தூண்களை தற்போது கார்டர்கள் மூலம் இணைக்கும் பணியும் வேமெடுத்துள்ளது. 5,500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியிலும் இரண்டாம் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Back to Top News
Top
September 15, 2026 at 10:06 AM
16 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த தூண்கள்.. மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிகள் தீவிரம்
Polimer News