கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூரு சென்ற 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். ஜுஜுவாடி சோதனைச் சாவடி, ஓசூர் பேருந்து நிலையம், ராயக்கோட்டை சாலை ஆகிய மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பேருந்துகளின் ஆவணங்கள், வரி செலுத்திய விவரங்கள், பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் 46 பேருந்துகளுக்கு ரூபாய் 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, 2 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Back to Top News
Top
September 15, 2026 at 10:50 AM
ஓசூரில் விடிய விடிய ஆம்னி பேருந்துகள் சோதனை: 46 பேருந்துகளுக்கு ரூ.18 லட்சம் அபராதம்
Polimer News