சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தெரு மின் விளக்குகள் அனைத்தையும் ஒளிரச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரில் உள்ள 3 லட்சத்து 11 ஆயிரத்து 285 தெரு விளக்குகளில் 2 ஆயிரத்து 225 விளக்குகள் எரியாமல் இருப்பது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விளக்குகளையும், நிலத்தடி மின்வட பழுதுகளையும் விரைந்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மின்விளக்குகள் எரியவில்லை என்றால் அது குறித்து 1913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.