உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டும் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மற்றும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்தார். 525 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, 15 கண்காணிப்பு கோபுரங்கள், 300 சிசிடிவி கேமராக்கள், 3 ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும், கடற்கரையில் நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Back to Top News
Top
August 19, 2026 at 5:28 AM
புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுவிழா முன்னேற்பாடுகள்..
Polimer News