நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் அருகே வெள்ளையாற்றில் வேளாங்கண்ணி தனியார் விடுதிகளின் கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் வந்து, அனுமதியின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை அப்புறப்படுத்தி, தவறு செய்த விடுதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.